அமைதித் தேடும் மனிதனுக்கு

அமைதித் தேடும் மனிதனுக்கு
அமைதியை அளித்திட
அன்பைத் தேடும் மனிதனுக்கு
அன்பை அள்ளித் தந்திட
நிம்மதி தேடும் மனிதனுக்கு
நிம்மதி நிறைவாய் நிறைந்திட
சோர்ந்து போன மனிதனுக்கு
சுகமான இறைப்பற்றை தந்திட
வாழ்வைத் தேடும் மனிதனுக்கு
வளமாய் வாழ்வை வழங்கி
கிறிஸ்து பிறந்த இந்நாளிலும்
தொடர்ந்து வரும் புத்தாண்டில்
ஒவ்வொரு நாளும் நிறைவாக
பெற்று மகிழ்ந்திட எம்பெருமான்
இயேசுவை வேண்டிக் கொள்வோம்.

எழுதியவர் : திருமதி. லியோனா இருதயசாமி (21-Dec-16, 3:45 pm)
பார்வை : 207

மேலே