வாழ்க்கை சவாரி

வாழ்க்கை எனும் கருவறை,

நம்மை சிறைகொள்ளும் உள்ளிருக்கும்வரை !

உடல் எனும் குதிரையேறி, மனம்போகும் சவாரி

அது!

உண்மைகளை உணர்த்தும், பல பாதைகள் மாறி !

இலக்கை நோக்கிய பயணம்,

இதனிடையே நம் வாழ்வியல் தருணம்

வாழ்க்கையும் வளம்பெறும்,

அதில் சோதனைகளும் இடம்பெறும்.

உன்,

அச்சம் என்ற பலகீனம்,

நீ,

துச்சம் என்றதும் பலமாகும்,

பின்,

உச்சம் உனது உணர்வாகும்.

எழுதியவர் : (26-Dec-16, 10:30 am)
பார்வை : 81

மேலே