நரம்புகள் தளரும் வயதிலும்

மயில் தோகையின் வருடல்களாய்
உனது மூச்சு
எனது கண்ணாடிகளின் பிரதிபலிப்பாய்
உனது காட்சி
எதிர்படும் யாதுமாய் நீ
எதிர்வினை யாய் ஏற்றுதே தீ
ஆயுதம் ஏந்திய இரவுகளில்
நிராயுதமாய் நான்
வதம் செய்யுதடி உன்
வதனம்
கனவுகளில் கர்பம் தரிக்கும்
ஓவியமே
சிற்பிகளின் உளிகள் செதுக்க
துடிக்கும் சிற்பமே
கவிஞர்களின் எழுதுகோல்
ஏங்கும் கவிதையே
பிரம்மனின்
ஒட்டு மொத்த ரசனையின் பால்
பிறந்த என் எதிர்பாலினமே
எழுத்துக்களில் அடைபடாத
அழகே
சொற்களில் விளக்க இயலா
வடிவே
இத்தனை வருட காத்திருப்பின்
ரகசியம் உடைக்க
ஒரு பார்வை தந்தவளே
கொஞ்சும் தமிழையும்
மிஞ்சும் உனது சிரிப்பொலிகள்
முச்சங்கத்தையும் இதோ
முச்சந்தியில் காட்டுதடி
எனது எதிர்பார்ப்பில் துளிர்விடுகிறது
நரம்புகள் தளரும் வயதிலும் உன்
நறுமணம் வேண்டும் என்று

எழுதியவர் : கி.கவியரசன் (27-Dec-16, 11:37 am)
சேர்த்தது : கி கவியரசன்
பார்வை : 226

மேலே