நகைச்சுவை- ராமு-சோமு உரையாடல் -வேலை இல்லா விவசாயி

சோமு : அண்ணே, ராமு அண்ணே ...................
உங்கள ஒண்ணு கேக்கணும் .................கோச்சிக்க மாட்டிங்களே

ராமு : சொல்லுடா நீ என் வலைப்பூ மகன் மாதிரி
ஒண்ணா எப்படி கொசீப்பேன்........சொல்லு

சோமு : நம்ம வயல் வெளி பருவ மழை தப்பியதால்
பாலையா கெடக்குது உங்களுக்கு தெரியும்
எனக்கு வேல எதுவும் இல்ல , சும்மா இருக்க கஷ்டமா இருக்கு
அண்ணே
நா என்னத்த செய்யட்டும்
ராமு : டேய் உனக்கு சாப்பாட்டுக்கு குறைச்சல் இல்ல
பின்ன டயம் வெத்தா போகுதுனு நினைக்கறே அவ்வளவு தானே
பேசாம கட்சில சேர்ந்துடு டயம் பாஸுக்கு டயம் பாஸ் மீதி நான்
சொல்ல தேவல ............! ! !!!!!!!!!!!!!!!

சோமு : நான் உங்க சிஷ்யனுங்க , காந்திய வாதிங்க நாலு காசு
சம்பாதிச்சாலும் உழைச்சு சம்பாதிக்கணும் உண்மையா வாழனும்
இது நீங்க எனக்கு எப்போதும் போதிப்பது இது தேவா வாக்குங்க ......

ராமு : உன்ன என் பிறவா மகனா நான் நெனக்கர்துக்கு நான் தான்
குடுத்து வைக்கணும் ............எனக்கு இன்னிக்கு ரொம்ப
சந்தோசம் ..........உன் மனசுக்கு கடவுள் குறை வைக்க மாட்டான்
மலை பெய்யும் உன் மனமும் நிறையும் ; உனக்கு இனி எதற்கு
வேலை ......போய் வீட்டு வேலை கவனி .........!!!!!!

சோமு : நன்றி அண்ணே ...............நான் அப்போ வர்றேன் ...............!!!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Jan-17, 4:07 pm)
பார்வை : 146

மேலே