மனம் விரும்புதே உன்னை

தடாகம் பூக்கும் தங்கத் தாமரையே
விடாமல் மனதில் நின்று ஆடுகிறாயே
சுடர் விடும் அழகு தாரகையே
தடம் பதித்தாய் என்னுள் நீயே......

நெஞ்சு கூட்டில் நிலவாய் முளைத்தாய்
கொஞ்சும் காதல் தீயை வைத்தாய்
பிஞ்சு விரல் கொண்டு கனவில்
மஞ்சம் உறங்காது எனை வதைத்தாய்......

அஞ்சனம் பூசிய அஞ்சுகம் நீயே
அஞ்சாதவனை நடுங்க வைத்தவளும் நீயே
அன்னப் பறவையின் சிறகை விரித்தும்
என்னுயிரை ஆட்டுவிக்கும் அழகு பூஞ்சிலையே......

வெயில் நின்று வாடும் மலரில்
துயில் கலைத்த முல்லைப் பூவே
குயில் அமரும் உந்தன் குரலில்
மயில் போலென் மனம் ஆடுமே......

மண் புதையும் வேராய் நானிருந்து
மலரே உன்னை நாளும் தாங்குவேன்
இதயம் நுழைந்த அழகு சிலையே
உயிர் மூச்சை உனக்காக வாங்குவேன்......

எழுதியவர் : இதயம் விஜய் (20-Jan-17, 1:15 pm)
பார்வை : 468

மேலே