காதல் பரிசு

மனசுக்குள் மத்தாப்பு மாறிடுமோ நெஞ்சம்
கனவெல்லாம் காதலினால் கண்மயங்கி நிற்கின்றேன் !!!


உனதெழில் கொல்ல உணர்வாயோ கண்ணே !
வனவாசம் வேண்டாமே வாஅருகில் பரிசாக !!


வாராயோ வெண்ணிலவே வந்தருகே நின்றிடுவாய்
தாராயோ நேசத்தைத் தந்திடவாய் காதல்பரிசாய் !!!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (14-Feb-17, 10:02 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 99

மேலே