தமிழகம்

திசைகள் நான்கும் திருடர்கள் கூட்டம்
சூழ்ந்து தாக்கும் தீவானது!

அதிகார போதையினர் காலில் மிதிபட்டு
அழகு குலைந்த பூவானது!

ஊழலால் பிழைக்கும் உயிரினங்கள்
உரிமையுடன் உலவும் காடானது!

எதிர்காலம் எண்ணி அஞ்சி சாவதே
மக்கள் எங்கள் வாழ்வானது!

எழுதியவர் : (16-Feb-17, 1:30 pm)
சேர்த்தது : usharanikannabiran
Tanglish : thamilagam
பார்வை : 80

மேலே