தொடர்பில்லா தொடர்ச்சியாய்....

ஒவ்வொரு நாளும்...
மை தீர்ந்த பேனாவுடனும்...
முழுமை பெறா கவிதையுடனும்...
இமையின் இடையில் சேமித்த கனவுடனும் ...
துயில் கொள்ள செல்கிறேன்,

விடிந்தும் கவிதையின் தொடர்ச்சியாய்,
தொடர்பில்லா வாழ்வு .......

நாளைய காட்சியை...
இன்றே -
சொல்பவர் இயக்குனர்...
சொல்லாதவர் இறைவன்....

எழுதியவர் : ரமண பாரதி (12-Jul-11, 2:14 am)
பார்வை : 378

மேலே