ஒலிம்பிக்ல கரி - ஊழல்ல முதல் இடம்
![](https://eluthu.com/images/loading.gif)
இந்தியா ஆசியாக் கண்டத்தில்
சீனாவுக்கு அடுத்த நிலையில்
வல்லரசு நாடாக இருந்தாலும்,
ஒலிம்பிக்ல நாம எந்த இடத்தில்
இருக்கிறோம் என்பது உலக மக்கள்
அனைவருக்கும் தெரியும். மட்டை
ஆட்டம் (கிரிக்கெட்) தவிர பிற
விளையாட்டுக்களில் பெரிய
சாதனையை நம் விளையாட்டு
வீரர்கள் இன்னும் எட்டவில்லை.
■★★
அதற்கு காரணம் நம் விளையாட்டு
வீரர்களே
முழுப்பொறுப்பு
என்று கூறக்கூடாது.
நமது அணிகளுக்கு வீரர்களைத்
தேர்ந்தெடுக்கும் முறை, தக்க பயற்சி
இல்லாமை, அவர்கள் உணவுக்குச்
செலவிடும் தொகை போன்ற பல
காரணங்கள் உள்ளன.
★★★
மட்டை ஆட்டத்திற்கும் டென்னிஸ்
விளையாட்டுக்கும் இறகுப்
பந்தாட்டிற்கும் கிடைக்கும்
வருமானமும் ஊக்கமும் பிற
விளையாட்டு வீரர்களுக்குக்
கிடைப்பதில்லை.
◆◆◆◆
மட்டை ஆட்டம் தவிர பிற
விளையாட்டுக்கள் அனைத்திலும்
விளையாட்டு துவங்கி முடியும் வரை
அந்த விளையாட்டுக்களில் பங்கு
பெறும் எல்லா வீரர்களும்
சுறுப்பாக விளையாடிக்
கொண்டிருப்பார்கள். ஆனால் மட்டை
ஆட்டத்தில் களத்தில் இருக்கும்
மூன்று பேர் மட்டுமே சுறுப்பாக
இருப்பார்கள். அதுவும் குறிப்பிட்ட
நேரத்திற்கு பிறகுஅந்த
மூன்றுபேருக்கும் ஓரளவு ஓய்வு
கிடைக்கும். மற்றவர்கள்
அவ்வப்போது
ஓடுவார்கள்.
இந்த விளையாட்டில்
மட்டுமே நம் அணி உலக
சாதனைகளைப் படைத்திருக்கிறது.
■◆●■●◆
டெண்டுல்கர் மட்டை விளையாட்டில்
தான் சாதனை
படைக்கவேண்டுமென்ற ஒரே
நோக்கத்தில் விளையாடினார்
என்பதை யாராலும் மறுக்க முடியாது.
★◆■★■
டெண்டுல்கரின் மோசமான
விளையாட்டினால் பல முறை
இந்திய அணி தோல்வியைச்
சந்தித்திருக்கிறது என்பதை யாரும்
மறக்கமுடியாது.
■◆◆●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●■
கருத்துச் சித்திரம்: 'தி இந்து' 9/3/2017●
◆◆◆
கருத்து: பாலாஜி சண்முகம்,
சென்னை.