பொதுவுடைமை

பரந்துவிரிந்த கடல் அன்னையை ஏனடா கூறுப்போட்டு பிரித்து கூவிக் கூவி விற்கிறீர்கள், இது இந்தியக் கடற்பகுதி என்றும், அது இலங்கைக் கடற்பகுதி என்றும்....

எதற்கெடுத்தாலும் தன்னுடைமை கொண்டாடும் உங்களிடம் சமத்துவம் குறித்து பேசும் நான் முட்டாள்த்தனம் நிறைந்த பைத்தியம் தான்டா.....

உலகையே கூறுபோட்டு பிளாட் போட்டு இது இந்தியா என்றும், அது அமெரிக்கா என்றும்,
இன்னும் பல பாகங்களுக்கு பல பெயர்களிட்டு வாழும் தன்னுடைமை பெருச்சாளிகளே இந்த உலகம் பொதுவுடைமை ஆகுவது எப்போது???...

உலகின் எந்த இடத்திற்கும் நான் சென்று வர இந்த உலகம் எனது பிறப்புரிமை..
அதற்காக உங்களிடம் எதற்காக நான் அனுமதி வேண்டி நிற்க வேண்டும்???..
யாரடா நீங்கள் எனது சுதந்திரத்தைப் பறிக்கத் துடிக்கும் கயவர்கள்???..

நாட்டின் பெயரில் உயிர்களைத் தின்னும் பிணங்தின்னி கழுகுகளே, உங்களை வேட்டையாட பெரிய கழுகுகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்...

வெகுவிரைவாக யாவும் மாறும்..
அரசாங்கம் என்பதெல்லாம் போலிகளாக மக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மக்களைக் காவு வாங்கிக் கொண்டிருக்கின்றன..
இதன் பின்னணியில் சாதி, மத வெறி, இன வெறி, மொழி வெறி போன்றவை பல தாண்டவமாடுகின்றன...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (19-Mar-17, 10:31 am)
Tanglish : pothuvudaimai
பார்வை : 634

மேலே