நெஞ்சில் உன் நினைவின் நித்தியப் பூக்கள்

வளைந்து நெளிந்து செல்லும்
நதியைப் பார்க்கும் போது
நெஞ்சில் உன் நினைவலைகள் !

வளைந்து சாய்ந்து நிற்கும்
கொடி மலரைப் பார்க்கும் போது
நெஞ்சில் உன் நினைவின் நித்தியப் பூக்கள் !

வளைந்தாடும் தென்னையின்
கீற்றினைப் பார்க்கும் போது
நெஞ்சில் வந்து விழும் உன் தென்றல் கடிதம் !

வளையோசை கையில் குலுங்க
கொலுசோசையில் நீ நடந்து வரும் பாதை பார்த்து
காத்திருக்குது இந்தக் காதல் நெஞ்சு !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Apr-17, 8:31 am)
பார்வை : 90

மேலே