கனவில்வந்த காரிகை
கொல்லிமலைச்சாரலிலே முன்னிரவு வேளையிலே
வானில் மஞ்சள் நிலா உலாவரும் நேரத்திலே
துள்ளும் மானாய் என்முன் வந்து நின்றாள்
தங்கப் பதுமையொத்த கன்னியவள்
கேளிக்கைக்கு வேட்டையாடவந்த நான்
அந்த மானைக் கண்டு சித்தம் தடுமாறிப்போனேன்
சித்தம் தெளிந்து அவளருகே சென்று நின்றேன்
கொடிய மிருகங்கள் வாழ் இக் கானகத்தில்
இந்த வேளையிலே பெண்ணே நீ வந்ததேன்
என்று கேட்டேன் , அதற்க்கு கண்ணியவள் கூறினாள்
மர சுள்ளிக்காய் வந்த கொல்லி காட்டு வாசி நான்
புலி ஒன்று துரத்த எப்படியோ பதுங்கி பதுங்கி
இவ்விடம் வந்து சேர்ந்தேன் உம்மைக் கண்டேன் என்றாள்
சத்தியமாய் சொல்லுகின்றேன் இவளைபோல் ஓர்
அழகியை நான் இதுவரை நான் பார்த்ததில்லை என்பேன்
ரம்பா, ஊர்வசி என்று தேவ பேரழகிகள் உண்டு என்று
புராணத்தில் இருப்பதை படித்ததுண்டு
அப்பப்பா இந்த என் கண்முன் நிற்கும் மின்னல் கொடியின்
அழகை என்னென்று சொல்லி விளக்கிடுவேன்
வட்ட வட்ட அவள் முகத்தில் கெண்டை இரு கண்களோ
குவிந்து விரியும் சிவப்பு ரத்தினமோ இதழ்கள்
அதன்மேல் நேர்த்தியான வண்ண நாசி
சற்றே நீண்ட வண்ண முகத்தை உடம்புடன் சேர்க்கும் கழுத்து
விம்மிப்பு பருத்து அந்த மேலாடைக்கு வனப்பு தரும்
பருவத்தின் எழுச்சியாம் கொங்கைகள்
நீண்ட வாழைத்தண்டுகள் ஒத்த கால்கள்
அதில் கொஞ்சும் ஜல் ஜல் ஒலி தரும் வெள்ளி சலங்கைகள்
கைகளில் பலநிற மூங்கில் வளையல்கள்
பெண்ணே நீ போகும் இடம் ஏதோ என்று நான் கேட்ட்க
வஞ்சி அவள் சொன்னாள் "இந்த கொல்லிமலை
காட்டிலே கோலப்பன் என் தந்தை மலை வாழ் மக்கள்
எமக்கெல்லாம் தலைவன் மா வீரன் அவன்
எட்டுக்கை அம்மன் எங்கள் குலா தெய்வம்
இன்னும் என்னைப்பற்றி என்ன தெரியவேண்டும் ஐயா
என்று அவள் மலைவாழ் மக்கள் கொஞ்சு தமிழில் பேச
"கலங்காதே மங்கையே உன்னை வழிநடத்தி செல்வேன்
உன் காவலனாய் உன்னை உன் தந்தையிடம் கொண்டு
சேர்த்திடுவேர்ன் விடியும் முன்னே இந்த நிலவொளியில்
என்று கூற வஞ்சியவள் குற மாது
என் முன்னே சென்றால் வழி காட்டி அவள் பின்னே
நான் சென்றேன் காவல் தெய்வம் போல்
இது அத்தனையும் என் இனிய கனவு
கொல்லிமலைச்சென்ற நான்
அன்று மலை எல்லாம் சுற்றிப் பார்த்து
எட்டுக்கை அம்மனையும் வணங்கி விட்டு
சந்தையிலே அழகிய காட்டு வாசிகளையும் கண்டு கொண்டு
விடுதியில் நல்ல உணவும் உண்டு
இரவில் கண் மூடி உறங்கினேன்
கனவுலகு சென்றேன் கொல்லிமலைக் காரிகையைக் கண்டேன்
கனவும் கலைந்தது கன்னியும் காணாமல் போனாள்!