தனிமையெனும் சோகம்

விரட்டி விரட்டி விட்டாலும்
துரத்தி துரத்தி வந்தென்னை தொட்டுவிடுகிறது.!

தென்றலும் நாடி வரவில்லை..!
திங்களும் தேடி வரவில்லை..!

ஊக்கம் கொடுக்க உறவுகளில்லாமல்
என் ஆக்கங்களெல்லாம் ஏக்கத்தில் தவிக்கிறது..!

இரவைக்கட்டிக்கொண்டவன்
இன்பத்தில் மிளிர
இதயத்தை கட்டிக்கொண்டு
இரவுகளை நனைக்கிறேன்..!

கவலைகளை கண்ணீரால் கரைக்க
திவலைகளாகி தேகத்தை எரிக்கிறது..!

காற்றோடு கைகோர்த்து
சோகத்தை சொல்லியழ
கண்ணீரை கைதுசெய்து
செந்நீராக்கி சிரிக்கிறது..!

துக்கம் என்னை தூக்கிலிட
வலித்திருந்தும் சிரிக்கிறேன் நான்..!

உறக்கம் என்னை ஒதுக்கிவைக்க
கலக்கத்தோடு கடக்கிறேன் நான்..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (6-Jun-17, 1:54 pm)
பார்வை : 1360

மேலே