முத்தம்மா

முக்குரோடு முத்தம்மா....
முத்தம்தர வெக்கமா? ....
ஒத்தவீடு பக்கமா
ஒத்த ஆளும் இல்லம்மா...
அஞ்சாறு வருசமா
உன் மேல வச்சே கண்ணம்மா...
வறண்டு போன கன்னத்துக்கு...
கருணை கொஞ்சம் காட்டம்மா...
வச்ச கண்ணு வாங்காம
பத்த வச்ச ஏ மனச....
பச்ச தண்ணி மேல என்ன
பாய் விருச்சு படுக்க வச்ச....
வயறு போல வயித்த வச்சு...
கயிறு கட்டி இழுக்குறேயே...
வறட்டி போல என்ன உருட்டி
செவத்துல நீ அடிக்கிறயே...
உரப்போட்ட சவுக்க நீயும்
நாரு நாரா பிரிக்கிறயே...
ஓடு போட்ட வீட்ட நீயும்
ஓட்ட போட்டு எறங்குறயே...
அணை இனி தாங்காது
மட திறக்க வாடி புள்ள...
தடை போட யாருமில்ல
தாலி கட்டி போவோம் உள்ள....

எழுதியவர் : (7-Jun-17, 8:00 am)
சேர்த்தது : குருமுருகன்
பார்வை : 70

மேலே