அகமகிழ ஒரு தினம்

அகமகிழ ஒரு தினம்

தந்தை என பெயர்சொல்லி அழைக்க
தாய் கொண்டு தீட்டிய ஓவியம்
தவழும் தங்கமதைக் தீண்டுகையில்
தானே தாயாக மாறும் மாயம்
 
காலமெல்லாம் தவமிருக்கும் உள்ளம் 
உரிமையையும் உணர்வையும் கலந்து
ஊமையாகி உருகுகையில் அம்மகவு
அப்பா எனஅழைக்க அகமகிழும் தருணம்
 
கண்மூடி மெய்மறந்து கண்ணீர் சுரக்கும்
தந்தையின் உள்ளத்திற்கெல்லாம்
நன்றி புகலும் நாளிதுவே

எழுதியவர் : கே என் ராம் (15-Jun-17, 1:09 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 96

மேலே