புதையல்
சேர்க்கப்பட்டச் சொத்து
மறைக்கப்பட்டுப் பின்
புதைக்கப்பட்டு என்றோ
தோண்டப்படும் போது
கிடைக்கப்பாட்டால் ஆகிறது புதையலாய்..
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும்
திறமையும் அப்படியே..
சரியான நேரத்தில்
கண்டுகொள்ளப்படும் திறமையும் புதையலே..
அதன் மதிப்பு பார்வைக்குத் தெரியாது
அதன் மினுமினுப்பு யாருக்கும் புலப்படாது
அது அளிக்கும் வெற்றி மகிழ்ச்சிக்கு கணக்கில்லை
கிடைத்த வாழ்க்கை கூட புதையலே
சரியான வழியில் வாழ்ந்தோமெனில்
நேர்வழியில் நடப்போருக்கு
தேவையில்லை எந்தப் புதையலும்..
நேர்மையான மனிதரெல்லாம் நாட்டின் புதையலே
உதவி செய்யும் உத்தமரே மனிதரில் புதையலே
பொன் காசு மட்டும் புதையலல்ல
நல்ல குணமும் மனமும் கூட புதையலே...