நட்பு
மண் நனைந்திட
மழை வந்து வந்து
பெய்திடல் வேண்டும்
ஒரு முறை மழை
பொய்த்தாலும் மண்
வறட்சியால் வாடும்
நண்பனின் நட்பு
மழையில் ஒரு முறை
நனைந்த நண்பனுக்கு
அதன் பின்னே வாழ்க்கையில்
வறட்சி என்பது யாண்டும் இலையே