எனது தேடல்

ஏன் பிறந்தாய்?
எதைத் தேடுகிறாய்?

பணம், ஆடம்பரம் இவற்றின் மகத்துவமென்ன?
ஏழ்மை, தரித்திரம் இவற்றின் அனுபவம் தருவதுமென்ன?

கல்வியின் நோக்கமென்ன?
பக்கம், பக்கமாக எழுதுகிறோமே அதனால் என்ன பயன்?
ஒரே பெயரில் ஒரே பாடத்தை பலர் எழுதுவது ஏனோ?

குழப்பமான உலகில் மேலும் மேலும் குழப்பும் அந்த சூத்திரதாரி எங்கிருக்கிறார்?
அவனை ஏன் காண முடியவில்லை?. அவனை ஏன் உணர முடியவில்லை?
மனம் மருளால் நினைந்திருக்கக் காரணமென்ன?

சத்தியத்தை உணராது பலர் அசத்தியத்தை உரைக்கக் காரணமென்ன?
பழைமையான குல வழக்கங்கள் போல் இன்றைய கல்விமுறை அமையக் காரணமென்ன?

இப்படி இன்னும் பல கேட்கப்படாத கேள்விகள் என்னுள் புதைந்திருக்கக் காரணமென்ன?
நான் யார்?
எடுத்துக் கூறாயோ என் நெஞ்சே?.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (20-Jul-17, 8:08 am)
Tanglish : enathu thedal
பார்வை : 1433

மேலே