புரியாமல்

அன்பே
நானாக தேடிவருவேன்
என்று தெரிந்தும்
வாட வைத்துவிட்டு
செல்கிறாயா?!
இல்லை
நிச்சயம் உன்னை
நாடி வருவேன்
என்று தெரியாமல்
ஓடி செல்கிறாயா?! என
ஒன்றும் புரியாமல்
ஒவ்வொரு முறையும் என்
உடல் வெந்து
உயிர் நொந்து
உருகி தவிக்கின்றதே
உன்னிடத்தில்!
அதனை ஏனடி
உணராமல் போகிறாய்?!
"நீ"
உன்னுடன்
வாழத் தொடங்க நினைக்கும்
நாட்கள்
அதனுடனே
சாகத் தொடங்கும்
நேரங்கள்
உன்னை பார்க்க துடிக்கும்
நாழிகைகள்
பார்த்து தவிக்கும்
நொடிகள் என
விடியல்களும் பொழுதுகளும்
கண்ணாடியின் பிம்பமாக
என்னிடத்தில் பிரதிபலிக்க
பிரியவும் முடியாமல்
இனையவும் முடியாமல்
இன்னல் படும்
எந்நிலைகள் ஏனடி
உயிரே
உனக்கு புரியாமல் போகின்றது???!!!...
......................................................................