கனவுகள்
என் கனவுகளுக்கு நான்
கோட்டையைக் கட்டப் போவதில்லை
சிறு ஓடையாக்கி அதை
வெளியே அனுப்பி
வௌவாலின் சிறகெடுத்து
வண்ணத்துப் பூச்சியின்
வண்ணம் பூசி
மேலோங்கி மிளிரச் செய்து
என் வெற்றியின்
பரிமணத்தைப்
பரிதியைச் சுற்றி
வலம் வரச் செய்து
என் அடிமனத்தின்
ஆசைக் கண்களால்
ஆர்ப்பாட்டமே இன்றி
என்றென்றும்
பார்த்துக் கொண்டிருப்பேன்..