அன்பு மகனே

என் அன்பு மகனே...

தெளிவான சிந்தனை கொள்...

நடந்தவை கடந்தவையாக இருக்கட்டும்...

அழகான உன் அன்பு மனம் அப்படியே இருக்கட்டும்...

உன் மனதை உரக்க சொல்...

குழப்பத்தில் நிசப்தம் தேடு...

உனக்கென ஒரு உலகம் உருவாக்கு...

உலகின் உன் ஒருவன் நீ என நீ நம்பு...

கோபத்தில் மௌனம் மட்டும் பேசாதே...

உன் உணர்விற்கு உயிர் நீ கொடு...

கவலைகள் வந்தால் கடிந்து கொள்ளாதே...

உன் சோகங்கள் எல்லாம் சேர்த்து வைக்கத்தே...

பறந்த உலகத்தில் தனிமை உன்னுடன் சேர்க்காதே...

இந்த உலகில் நான் கொண்ட...
என் பிம்பமடா நீ..
ஒரு போதும் உடையதே..
உன்னுடன் இருக்கும் என்னை நம்பு...
ஒவ்வொரு முறை உடையும் போதும்
உறுதி என்னும் பாடம் மட்டும் கற்றுக்கொள்...

இப்படிக்கு
உன் அப்பா

எழுதியவர் : நான் (22-Aug-17, 12:01 am)
சேர்த்தது : Kavitha
Tanglish : anbu makanae
பார்வை : 906

மேலே