வரமாக நீ கிடைத்தாயே அம்மா

ஈரைந்து மாதங்களாக நீ செய்த தவத்திற்கும் வரம் கிடைத்தது,
ஈரைந்து மாதங்களாக நான் செய்த தவத்திற்கும் வரம் கிடைத்தது,
என்னை பெற்றதைத்தவிர வேறு ஒரு பாவமும் அறிந்ததில்லையே நீ,
தவமிருந்து பெற்ற வரமே இன்று சாபமாக மாறி நிர்கின்றதே உனக்கு.
உன் வயிற்றில் பிறந்ததாலே என் பாவங்களையெல்லாம் மறைத்து எனக்கு
வரமாக நீ கிடைத்தாயே அம்மா.

எழுதியவர் : கு.கார்த்திக். (22-Aug-17, 1:31 pm)
பார்வை : 531

மேலே