ஒருதலை காதல்
கண்களால்
உன்
கண்களால்
என்னை
சாய்த்து
போகின்றாய்...
கொஞ்சமாய்
அடி
கொஞ்சமாய்
என்னை
மீட்டி
போகின்றாய்..
விழுகிறேன்
அன்பே..
உயிர்
மீளவே
என்னை
தீண்டிடு
பெண்ணே..
துணையாகவே
நீ
வேண்டுமே...
என்னை
சேர்ந்திடு
கண்ணே...
தேவதை
அவள்
பார்த்திட
மழை
தூறுதே
என்
நெஞ்சிலே..
விரும்பியே
அதில்
நனைகிறேன்
நான்
விலகி
போக
மனமும்
மறுக்குதே
வரிகள்
இல்லா
கவிதையாய்
கடந்து
போகிறாய்
நீயடி
வார்த்தை
இல்லா
கவிஞனாய்
நின்று
கொள்கிறேன்
நானடி
சிறகு
முளைத்த
பறவையாய்
வானம்
தேடி
பறக்கின்றேன்
மேகம்
எல்லாம்
தாண்டியே
விண்மீனை
தீண்ட
துடிக்கிறேன்