என் காதல்

உன் கண்கள்
என்னில் நெய்த
ஆடையாய் காதல்

என் கைகள்
உன்னில் செய்ய
கூடையாய் ஆசை

உன் பால் கண்கள்
குடைந்து எடுத்த
நெய்யாய் காதல்

உன் கண் அம்புகள்
தினம் பாய்ந்து
மெய்யாய் சாதல்
என் காதல்

என் பால் பருவத்தை
உசுப்பி எழுப்பும்
சருகு சத்தம் நீ

என் மீசைக்கு
ஆசை சிறகு சேர்த்த
இறகு பறவை நீ

உன் பார்வைகள் விழுங்கி
என் போர்வைக்குள்
பொய்யாய் வாழும்
என் காதல்

உன் பார்வையில் விழுந்து
தினம் தினம்
புதிதாக பிறக்கிறது
என் மனம்

உன் பார்வையில்
ஒரு பேருந்து பயண
சாலையோர மரமெனதான்
நானெனத் தெரிந்தும்
உன் பார்வை பட்டதும்
தானாக பறக்கிறது
என் மனம்

உன்னைப் பார்த்ததும்
இடம் பொருள்
எதுவென்பதையும்
நான் உனக்கு
யார் என்பதையும்
தானாக மறக்கிறது
என் மனம்


கானல் நீராகத் தான்
உன்னைச் சேராத
என் கனவுகள்
எனத் தெரிந்தும்
அதை அழித்திட
ஏனோ மறுக்கிறது
என் மனம்

கவிதைகள் மட்டும்
கட்டாயம் தினம்
எழுதி பார்த்து
இரவுகளை கழித்து
கடைசி ஆசை
தீர்த்து தினம்
கட்டிலில் இறக்கிறது
என் காதல்

கண்கள் மட்டும்
கட்டாயம் விழிக்கும்
மறுநாள் மயக்கும்
உன் விழிகள் நோக்க
காத்திருக்கத் தொடங்கும்
என் காதல்

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (6-Oct-17, 11:58 am)
Tanglish : en kaadhal
பார்வை : 624

மேலே