போதாமை

வார்த்தைகளின் பிடிக்குள்
வசப்பட மறுக்கும்
வாழ்வின் துயர்க் கண்ணிகளை
என்ன செய்யப் போகிறேன்?

கண்ணிகளைப் பின்தொடரும் நுட்பம்
கைவரப் பெற்றதான கருவம்
முறைத்துப் பார்க்கிறது.

வாழ்வின் போதாமையோடு
ஞானத்தின் போதாமையும்...

எழுதியவர் : கனவுதாசன் (14-Oct-17, 2:20 pm)
பார்வை : 45

மேலே