குழந்தை

மாசில்லா சிரிப்பு
மனம்முழுக்க உற்சாகம்
மனச்சோர்வை நீக்கும்
முத்தான மழலை

மலர்போன்ற பாதம்
ஓயாது உழைக்கும்
மீன்போன்ற கண்கள்
ஓராயிரம் கதைசொல்லும்

செவ்விய இதழ்கள்
சீறிபாய்ந்து முத்தமிடும்
செவிகொடுத்து கேட்கும்
சிறந்த தாலாட்டு

கல்லமிலா உள்ளம்
பேச்செல்லாம் வெல்லம்
காண்போர்கள் எல்லாம்
உன் வசம்

அத்தை அம்மா
தாத்தா அண்ணனென
உலகில் யாவரும்
உனக்கு சொந்தம்

பொழுதெல்லாம் போதவில்லை
புரியாது புரியும்
பாட்டமும் ஆட்டமும்
கண்டு கழிக்க

எழுதியவர் : பவித்ரா (23-Oct-17, 3:38 pm)
Tanglish : kuzhanthai
பார்வை : 372

மேலே