காதல்

கண்ணோடு கண் சேர்ந்தபின்னே
நெஞ்சத்தையும் கிள்ளிவிட்டபின்னே
என்னுள் என் மனதில் காதல் தீ
வளர்த்த பின்னே , பாராமுகமாய்
இருப்பதேனோ பெண்ணே!
வந்திடுவாய் என் நெஞ்சில் தங்கிடுவாய்
என்னவளாய், என்றும் என் இனியவளாய்
என் நெஞ்சில் நீ கிள்ளிவிட்டாய்
கிள்ளிய மருவில் காதல் அரும்பி
மலர்ந்து ரோசாப்பூவாய் உன்
வருகைக்கு காத்து நிற்கின்றது இப்போது
ஏற்றிடுவாய் இந்த ரோசாப்ப்பூவை
என் மானசீக ரோசா செண்டாய்
என் காதல் பரிசாய் ! வா விரைவில்
பெண்ணே , என் காதலியாய்
என்னவளாய் ஆகிவிடு
என் மனதை இன்னும் வதைக்காமல்
என்னை.... இல்லை நம்மை வாழவிடு!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Nov-17, 4:17 pm)
Tanglish : kaadhal
பார்வை : 100

மேலே