செல்லத் தங்கமே

பட்டுவண்ண ரோசாவே
பாசமுள்ள பைங்கிளியே !
சிட்டைப்போல் சிரிப்பினிலே
சித்திரமா சொலிப்பவளே !
சுட்டுவிரல் பிடித்தபடி
சுத்திவரும் சுந்தரியே !
மொட்டுவொண்ணு விரிந்தாற்போல்
முத்தத்தில் மலர்ந்தாயே !!

அப்பான்னு அழைக்கையிலே
ஆயிரம்பூ பூத்ததம்மா !
உப்புமூட்ட சுமந்தபடி
ஊர்சுத்திக் காட்டிடுவேன் !
சொப்புவச்சி விளையாடச்
சொல்லிநானும் தந்திடுவேன் !
எப்போதும் ஒன்நினைப்பே
இனிக்குதம்மா நெஞ்சினிலே !!

கால்கொலுசு சத்தத்தில்
கண்முழிச்சிப் பாத்திடுவேன் !
பால்வாங்கி வந்துனக்குப்
பக்குவமா கொடுத்திடுவேன் !
சேல்கெண்டை மீனாட்டம்
சேட்டையிலே துள்ளுறியே !
மேல்விழுந்து நீயாட
மேனியெல்லாம் சிலிர்க்குதம்மா !

ரெட்டசடை போட்டுவிட்டு
ரிப்பனையும் கட்டிவிட்டு
சுட்டியுன்ன பாடசாலை
சுமந்துகொண்டு போவேனே !
அட்டைப்போல் ஒட்டியேநீ
அடம்பிடித்தால் ஆகாதே !
கட்டிவெல்லத் தங்கமேநீ
கலங்காம செல்லமேபோ !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Nov-17, 1:13 pm)
பார்வை : 87

மேலே