நீ அந்த ஆகாய தேவதையோ

விழிகள்
----------நிலவோ நீந்துகின்ற கயலோ ?
இதழ்கள்
---------செம்பவளமோ அந்திச் செவ்வானமோ ?
இதழிடையே
----------அது என்ன மின்னலோ பாண்டியன் முத்துக்களோ ?

அசையும் இடை
-----------அல்லிக் கொடியோ அன்றி நாணலோ ?

நடையில் இளம் பிடியே
----------பறி போகுது மனசு நில் சொல்லிச் செல்
-----------நீ அந்த ஆகாய தேவதையோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (30-Nov-17, 5:48 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 229

மேலே