காணாமல் போன கவிதைகளை

காணாமல் போன கவிதைகளை ...



உன் கண்ணில்
ஒருதுளி வழிந்தது !
என் கவிதையில்
எழுத்தொன்று அழிந்தது !

உன் கண்ணீர்
முடிவின்றி தொடர்ந்தது !
என் கவிதை
முழுவதும் தொலைந்தது !

எழுதியது
எப்படி அழியும்
முழு கவிதையும்
எப்படி தொலையும்

அடுத்தடுத்த வரிகளில்
அதன் காரணம் புரியும்
அழிந்து தொலைந்த
கவிதையெல்லாம்
உன் புன்னகையால் தானே
ஆனது உதயம் !

ஆக்கும் சக்தி
கொண்டிருப்பின் - அது
அழிக்கும் சக்தியும்
கொண்டிருக்கும் !

யார்க்கும் தெரிந்த
இவ்வுண்மையினை
உன் புன்னகை கண்ணீரால்
புரிந்துணர்ந்தேன் நான் ..

கண்ணீரை துடைத்திடு
காணாமல் போன
கவிதைகளை மீட்டெடு !

கண்ணே புன்னகைத்திரு
தினம் புது புது
கவிதைக்கு விதை இடு !


- யாழ் ..

எழுதியவர் : யாழ் (3-Dec-17, 12:37 pm)
பார்வை : 141

மேலே