நானும் ஒருவன்
அழும் குழந்தையிடம்
அகிம்சை வேண்டும்
அழகில் நாணும் மங்கையிடம்
அகிம்சை வேண்டும்
அழகை ரசிக்குமிடம்
அகிம்சை வேண்டும்
உள்ள கிளர்ச்சியின் போது
அகிம்சை வேண்டும்
சர்ச்சைக்கு வழிவிடும்
சண்டைகளுக்கு
அகிம்சை வேண்டும்
மனம் நெருடும் போது
அகிம்சை வேண்டும்
அகிம்சை வேண்டும்!!
அகிம்சை வேண்டும்!!
ஆனால்
பிறர் தாக்கும் போது
தடுக்கும் துணிவு வேண்டும்!!
பிறர் வீழ்த்தும் போது
எதிர்க்கும் தைரியம் வேண்டும்!!
தோல்வியின் போது
வெற்றியின் மீது நம்பிக்கை வேண்டும்!!
மூடன் ஆக்கும்
மூடர்கள் மேல் கோபம் வேண்டும்!!
ஏன் என்றால்!!
நாம்
அகிம்சைவாதியும் அல்ல
அடிமைவாதியும் அல்ல
வன்முறையாளனும் அல்ல
வேதம் அறிந்தவனும் அல்ல
நாத்திகனும் அல்ல
படைப்பாளியும் அல்ல
பகையாளியும் அல்ல
காலம் தேடி திரியும்
சாதாரண மனிதனே!!
- மூ.முத்துச்செல்வி