கட்டளை கலித்துறை

உழைக்கும் உழைப்பை உனக்கென மட்டும் ஒதுக்கிவைத்துப்
பிழைக்கும் பிழைப்பில் பிறர்க்கென வின்றிப் பதுக்கிவைத்துப்
பிழையாய்ப் பிழைக்கும் பெரும்பிழை கொண்ட பிழைப்பகற்றி
மழைபோல் பொழியும் மனம்படை வாழ்வில் மகிழ்ந்திடவே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (24-Dec-17, 1:22 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 65

மேலே