கோதையின் நினைவில்
மணியோசை கேட்டிலையோ மாதவன் ஆலயத்தில்
மணிமொழி குரலோசை கேளாயோ நீயும்
எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ
சில்லென்ற மார்கழியில் எழுந்திடு எம்பாவாய் !
மணியோசை கேட்டிடும் மாதவன் கோவில்
மணிமொழி இன்குரலோ சைகேளா யோநீயும்
எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ
சில்லென்ற மார்கழி யில் .
எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ என்ற ஆண்டாள் திருப்பாவை
வரியை எடுத்தாண்ட இரு பாக்கள் .