தமிழ்

தமிழ் வாழ்க! தமிழ் வளர்க!!!


பிறந்து முதல் துளி பால் அருந்தும் முன்னே,
என் தந்தை என்னை பற்றி அறியும் முன்னே ,
என் உடலின் உறுப்புகள் தோன்றும் முன்னே,
ஒரு செல் உயிரியாய் நான் வீற்றிருந்த கணத்தில்,
என் தாயின் கன்னங்கள் மகிழ்ச்சியில் செறிவடைந்து,
கண்ணில் முதல் சந்தோச கண்ணீரை சிந்த,
அது அவளது வயிற்றில் வந்து வீழ்ந்த பொழுது ,
அந்த கண்ணீரின் இதம் கூறியது என் நாவின் உயிர் தமிழ்என்று…

எழுதியவர் : முத்துக்குமார் (27-Dec-17, 12:27 pm)
சேர்த்தது : முத்துக்குமார்
Tanglish : thamizh
பார்வை : 765

மேலே