சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் 36 கோரி ஸேவிம்ப ராரே - கரஹரப்ரியா
குறிப்பு:
கோவூர் ஈஸ்வரன் சுந்தரேசுவரனைக் குறித்த ஐந்து கீர்த்தனைகளுள் ஒன்று.
'கரஹரப்ரியா' என்ற ராகத்தில் அமைந்த கோரி ஸேவிம்ப ராரே' என்ற பாடலின் பொருளும், பாடலும் கீழே தருகிறேன்.
பொருளுரை:
திரு விளங்கும் கோவூரில் எழுந்தருளியிருக்கும் சுந்தரேசுவரப் பெருமானை விரும்பிச் சென்றடைந்து நமது விருப்பங்கள் நிறைவேறும் பொருட்டுச் சேவிப்போம் வாரீர்!
தேவர்கள் ஆயிர வண்ணங்களமைந்த பொன் மலர் கொண்டு பூசை செய்ய, அந்தணரும், சநகர் முதலிய முனி சிரேஷ்டர்களும் துதிக்க, “சகல சம்பத்துகளையும் அருள்வேன்” என்று கொலுவீற்றிருக்கும் சௌந்தரிய நாயகியின் பதியும், இத்தியாகராஜனுக்கு வரமளிப்பவரும், பரமாத்மாவுமான சிவபெருமானைச் (சேவிப்போம் வாரீர்!)
பாடல்:
பல்லவி:
கோரி ஸேவிம்ப ராரே
கோர்க்குலீடே ர (கோ)
அநுபல்லவி:
ஸ்ரீ ரமணீ கரமௌ கோ
வூரி ஸுந்த ரமூர் த்தி நி (கோ)
சரணம்:
ஸூரலு வெயிவ ந்நெ ப ங்கா ரு
விருலசே பூ ஜிம்பக பூ
ஸுருலு ஸநகாதி மௌநி
வருலு நுதிம்பக
ஸிரு லித்துநநி கொலுவையுண்டே
ஸ்ரீ ஸௌந்த ர்ய நாயிகா
வருநி ஸ்ரீ த்யாக ராஜ
வரது நி பரமாத்முநி ஹருநி (கோ)
யு ட்யூபில் T R Subrahmanyam - Kharaharapriya - kori sevimparare – tyagaraja என்று பதிந்து கடலூர் T.R.சுப்பிரமணியம் பாடுவதைக் கேட்கலாம்.
யு ட்யூபில் M.D Ramanathan-KoriSevimparare-Kharaharapriya என்று பதிந்து M.D.ராமனாதன் பாடுவதைக் கேட்கலாம்.
யு ட்யூபில் kOri sEvimparArE-kharaharapriyA - Thyagaraja - Sanjay Subramanyam என்று பதிந்து சஞ்சய் சுப்பிரமணியம் பாடுவதைக் கேட்கலாம்.