ஒரு தலை காதல்

கல்லூரி வெண்ணிலவாய்
கண் முன்னே வந்தவளே
கண்ணிமைக்கும் நேரத்திலே
காதல் உணர்வு தந்தவளே

உன் அழகில் அடிபடிந்து
அலையில்லா கடலாகினேன்..!
உன் பார்வை படும்போது
பனிமலையாய் உருகிருந்தேன்..!

உன் குரலின் இசை கேட்டு
குடிக்காமலே போதையாகினேன்..!
உன் குறும்பே தினம் பார்த்து
குழந்தையாக மாறிபோனேன்..!

விடுப்பு நீ எடுத்தால்
துடுப்பில்லா படகாகினேன்..!
விடுமுறை நாளென்றால்
விதியே நினைத்து முடமாகினேன்..!

நெருப்பே தொடும் பூச்சியாக
நெஞ்சத்தில் காதலே நினைத்திருந்தேன்..!
நேசம் எதுவும் பாதிக்காமல்
நேர்மை கொண்டு தடுத்திருந்தேன்..!

மனதில் விளைந்த காதலே
மறைத்து வாழ ஆசையில்லை..!
மறுப்பு நீ சொல்லிவிட்டால்
மடிந்திடுமோ என்ற கவலை..!

இதழ் பிரித்து விருப்பம் சொல்ல
இப்போது கூட துணிச்சல் இல்லை
இதயம் துடிக்கும் நாள் வரையில்
இறப்பு எந்தன் காதலுக்கு இல்லை..!

இதயம் துடிக்கும் நாள் வரையில்
இறப்பு எந்தன் காதலுக்கு இல்லை..!!!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (6-Jan-18, 1:01 am)
Tanglish : oru thalai kaadhal
பார்வை : 904

மேலே