காதல் வழி பாதை
முகம் மறைத்து கரம் மூடும்
கவலையில் காலமும் ஓடும்
தனிமையில் என் நெஞ்சம் வாடும்
தவிப்பினில் உள்ளம் கொஞ்சம் நோகும் ............
கொடுமையில் கொடுமை
சுவரோடு ஊமையான
என் காதலின் தனிமை.............................
கண் இமை சாளரங்கள்
மூடியே கிடக்கின்றன ...
கயல்விழி உன்னை காணாது
ஒரு நொடியும் விழிக்க தோணாது........................
முன்னோக்கி மட்டும் நகரும் நதிகள் நாட்கள்
அணைபோட்டு தடுக்க முடியாது .......
உன்னோடு நான் நகரும் நாட்கள்
அணைகட்டி கிடக்குது உடைக்க முடியாது ........................
மண்ணிற்குள் நுழைந்த நெகிழிகளும்
மனதிற்குள் நுழைந்த நினைவுகளும் ஒன்றுதான்
என்றும் மக்கி போவதில்லை......................
காதல் தொட்டால் அவன் முட்டாள்
தெளிவில்லாத சூழ்நிலை
அறிவில்லாத மனநிலை
இவைகள் மட்டுமே இறுதியில் மிஞ்சும்
கரையை தேடி அலையாய்
அலைகிறது மனது
முடிவில் மணலாய் புரள்கிறது உள்ளேயே ..................
கவி கொட்டி பயனில்லை
வழிகளும் காயங்களும் எனக்கு புதிதில்லை
நினைவுகள் எனும் மாத்திரையில்
காதல் நோயை சீர்படுத்தி கொண்டிருக்கிறேன்..
விதி நினைத்தால் உயிர் மிஞ்சும்
தாமதித்தால் உடல் மட்டும் புவிக்கு எஞ்சும்.................