மழலையே

மழலையே

தவழ்ந்திடு மழகினில்
உவகையும் பெருகிடும்
கவலைகள் விலக்கிடும்
தவப்பயன் மழலையே !

நவின்றிடும் மொழியதும்
செவிகளி லினித்திடும்
தவிப்புகள் தணித்திடும்
கவின்சிலை மழலையே !

நதியினில் அலையென
மதிதனை மயக்கிடும்
புதியனப் புகட்டிடும்
அதிசயம் மழலையே !

( வஞ்சித் தாழிசை )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (7-Feb-18, 12:40 am)
பார்வை : 58

மேலே