ஏங்கி ஏங்கி

குட்டு வாங்கி வாங்கியே
குனிந்த தலை...

திட்டு வாங்கி வாங்கியே
தளர்ந்த மனது.....

அவமானப்பட்டு அவமானப்பட்டே
அலைபாயும் சிந்தை...

அன்புக்கும்,
பாசத்திற்கும், நட்பிற்கும் ,

அமைதிக்கும், பண்பிற்கும் ஏங்கி
நிம்மதியில்லாத
சுற்றுச் சூழலில் சிக்கி தவிக்கும் மனதிற்கு
ஆறுதல் ஏது??

எழுதியவர் : சாந்தி ராஜி (10-Feb-18, 4:45 pm)
சேர்த்தது : shanthi-raji
Tanglish : yenki yenki
பார்வை : 763

மேலே