முகம்பொத்தி
வார்த்தைகள்
ரத்தம் சிந்துகின்றன;
உங்கள் நாவின்
வெட்டுப்பட்டு.
மௌனம் கிழிபடும் ஓசை
நாராசமாய் இருக்கிறது.
நிசப்த ஒழுங்கின் அமைதி
தியானத்தை விட மேலானது.
அர்த்த கர்ப்பங்கள்
கலையும் வேதனையைத்
தாங்க முடியவில்லை.
ஒளியாய்
சுடர வேண்டியது
கருகும் வாசனையில்
முகம்பொத்திக் கிடக்கிறேன்.