என் அருகில் நீ இருந்தால்

எட்டிபிடிக்கும் தூரத்தில்
எங்குபார்த்தாலும்
நிலா முளைக்கிறது....

இருவருக்கு மட்டும்
இடம்விட்டு
பூமிமுழுக்க பூ பூக்கிறது.....

சிலநூறு குழந்தைகளின்
சிரிப்பு சப்தம் கேட்கிறது.....

கிட்டதட்ட இதயத்துடிப்பு
இருமடங்கை எட்டிப்பிடிக்கிறது....

இருவருக்குமான
இடைவெளியில்இன்னோர் உலகப்போரே நடக்கிறது...

இடைவெளியை
குறைத்திடென மனம்
இறைவனை வேண்டி துடிக்கிறது...

உன் ஒவ்வொரு அசைவிற்க்கும்
உலகம் புதிதாய் பிறக்கிறது....

என் ஆறாம் அறிவோ
இரவுபகலை மறக்கிறது....

முட்டிமோதி வரத்துடிக்கும்
வார்த்தைகளை
உன் பார்வை
எட்டிப்பிடித்து கட்டிப்போடுகிறது...

எங்கோ தூரத்தில் குயில்
என்பெயர் சொல்லி அழைக்கிறது...

எனக்குமட்டும்
மழை பொழிகிறது....

என்னைமட்டும்
நனைக்கிறது....

என் அருகில்
நீ இருந்தால்.......

எழுதியவர் : பெ வீரா (11-Feb-18, 3:19 pm)
சேர்த்தது : பெ வீரா
பார்வை : 1589

மேலே