இரவுக்கொரு நிருபம்....

இரவின் நீளுமைக் குறைக்கவென
ஆளுமைக் கொண்ட ஒருவனுக்காக
தவமிருக்கலாம்....
தள்ளிப் போடும் உக்தி அறிந்திட,
தறிக்கெட்டோடும் மனப்பிரவாகமதை
மட்டுப்படுத்திடும் மந்திரவித்தைக்
கைக்கொள்ளவென காலம் கடத்தலாம்...
எந்தப் புள்ளியில் பிரிந்து தொலைத்தது
இந்த அடிவயிறுக்கு மேலும் கீழும் என.....
மேன்மைப் பொருந்திய
மேலானுக்கென என் பகல்
பொழுதனைத்தும் பறந்து விட்டுப்
பட்டினி ராகமதைச் சுரமிரக்கப்
பட்டப் பாடிற்குள் வந்துவிட்ட இரவு....
எங்கு போய் நொந்துக் கொள்ள...
இனி கீழான் பிரச்சனை.....