தெரிந்திடுவீர் எம்காதல்

கடவுள்களில் பேதமில்லை எங்கும் இருப்போம்
கோபுரத்தில் வாழுகிறோம் குடும்பத் தோடே,
அடுத்துள்ள தேவாலயம் மசூதியும் வீடே
அங்கிருந்தே இரைதேடிச் செல்வோம் காடே,
இடையில்வரும் காதலிலே இணைந்தே செல்வோம்
இடைஞ்சலாக எவருமெங்கள் இனத்தில் இல்லை,
நடைமுறையில் மனிதர்போல் நாங்க ளில்லை
நாட்டுப்புறா எம்காதல் தெரியும் தானே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Feb-18, 7:30 am)
பார்வை : 89

மேலே