மூவரும்
தொடுவானம் கலங்கரையாய்
நிலவொளியே வழித்துணையாய்
கடலலையே மெல்லிசையாய்
அலைகடலே பூவெளியாய்
கரைமணலே கம்பளமாய்
உன்கையே ஊன்றுகோளாய்
பூவுலகோ மூவுலகோ
ஈரேழு பதினாங்கோ
இத்தனையோ அத்தனையோ
எத்தனையோ கணக்கெல்லாம்
மாந்தர்களே இல்லாத
முடிவில்லா பாதையிலே
முத்தங்கள் நீதரவே
மூவரும் போயிருப்போம்
நீ...
நான்...
காதல்...