என் செல்லத்தின் செல்லமே

நான் கண்டெடுத்த
புது உறவு நீ
இரவில் எனக்கு முன்பே
நீ உறங்கியதை
நான் பார்த்ததே இல்லை
அப்படியே விடியும்போதும்
நான் விழித்தபின் நீ விழித்ததேயில்லை

இன்று உனை காணவில்லை
எங்கெல்லாம் தேடுகிறேன்
எனை பிரிந்து எங்கேச்சென்றாய்
உன் அழகிலும்
உன் மென்மையிலும்
மயங்கி உனை யாராவது
கடத்திப்போனார்களா...?

வழித்தவறி எங்கேனும்
போய்விட்டாயா
அழைத்த குரலுக்கு ஓடோடி
வருவாயே
இப்போது நான் அழைப்பது
உன் காதுகளில்
விழவில்லையோ...

நீயில்லாமல் என் செல்லமகள்
எப்படி இருப்பாள்
உனை அனைத்துக்கொண்டு
உறங்கும் அவள்
தனியாக எப்படி உறங்குவாளோ...

என் செல்ல நாய்குட்டியே
நம்வீடு தேடி வந்துவிடு
உனக்காக என் செல்ல மகள் காத்துக்கிடக்கிறாள்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (2-Mar-18, 11:33 pm)
பார்வை : 304

மேலே