எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் நம்பினால் நம்புங்கள்

பசிப்பிணியில்
உயிர்கள் வாடிடும் வரையில்
இங்கே எந்த நாகரிகத்திலும்
ருசியான உணவு
சமைக்க படவில்லை
என்பதே பொருள்..
தாகங்கள் தீர்த்திடாத
கலங்கிய நீர்கூட
கிடைத்திடாத வரையில்
ஆலயங்களின் தீர்த்தங்கள்
எந்த பாவத்தையும்
களைந்திடபோவதில்லை....
மலத்தினை கைகள் கொண்டு
மனிதனே அள்ளும் வரையில்
எந்த மலரின் வாசமும்
நாசியை தாண்டி
மனதை தீண்டப்போவதில்லை..
உரிமைக்காக வீதியில் வந்து போரடும் வரையில்
நம்பினால் நம்புங்கள்!
இது ஜனநாயகம்
நாம் எல்லோரும்
இந்நாட்டு மன்னர்கள்...!

எழுதியவர் : சுரேஷ் குமார் (4-Mar-18, 10:58 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 126

மேலே