மலாரின் கெஞ்சல்
உள்ளங்களிரெண்டு மகிழ்ந்து
உறவிலே திளைத்ததினால்
உயிர்த்துளிகள் இரண்டினைந்து
உன் உயிரிலே உருவாகி
கருவறையில் கருவானவள்
ஐந்திரெண்டு திங்கட்பொழுது
அன்னை நீயும்மென்னை
கருவிலே தாங்கிட
உன் உதிரத்தைஎல்லாம்
உணவாக உறிஞ்சி வளர்ந்தவள்
பெண்பிள்ளையென பிறந்திட்ட எனை
அன்னை நீயும் அள்ளியெடுத்து
அமுதூட்டி தாலாட்டிட
தரணியிலே உன்
தவப் புதல்வியென பிறந்தவள்
பெண்ணாக பிறந்ததினால்
பின்னாளில் பெருஞ்சுமை உனக்கென்று
பித்தர்களின் சொல் கேட்டு
கல் நெஞ்சத்துடன் அன்னை நீயும் என்னை
கள்ளிப்பால் கொடுத்து
கல்லறைக்கு அனுப்பி விடாதே
நான் அழிக்கப்பட வேண்டியவள் அல்ல
அரசாளப் பிறந்தவள்
இந்த அகிலம் காக்கப் பிறந்தவள்
எனை வாழவிடு
எனக்கு வாழ்வு கொடு