தலைப்புகளின்றி தவிக்கும் கவிகள்

தலைப்புகளின்றி தவிக்கும் கவிகள்


 அடிக்கடி தூக்கம் கலைகிறது
தொடர்வண்டி நிலையம் அருகில்
வாடகை வீடு ... ...
மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது
இளம் தம்பதிகளுக்கு ... ...


 கடைத் தெருவில்
யாரோ ஒருத்தி
கடந்து செல்கிறாள் ...
மல்லிகை வாசம்
வெறுப்பாய் இருக்கிறது
மனைவி இன்று ஊரில் இல்லை

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (6-Mar-18, 9:01 pm)
பார்வை : 71

மேலே