தலைப்புகளின்றி தவிக்கும் கவிகள்
தலைப்புகளின்றி தவிக்கும் கவிகள்
அடிக்கடி தூக்கம் கலைகிறது
தொடர்வண்டி நிலையம் அருகில்
வாடகை வீடு ... ...
மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது
இளம் தம்பதிகளுக்கு ... ...
கடைத் தெருவில்
யாரோ ஒருத்தி
கடந்து செல்கிறாள் ...
மல்லிகை வாசம்
வெறுப்பாய் இருக்கிறது
மனைவி இன்று ஊரில் இல்லை