காதலாகி கசிந்தவள்

வெண்பனி நிலவே என் வாசல் வந்து
புது கோலம் போடு
வண்ணங்களில் இல்லாமலும் பரவாயில்லை
உன் வருகையை மட்டும் சொல்லட்டும்
குளிர் தென்றலே என் சுவாசம்
சேர்ந்து வாசம் வீசு
புயலாக என்னை சாய்தாலும் பரவாயில்லை
நேசம் மட்டும் நிலைத்தால் போதும்
காதல் கடலே என் மீது
அலையாய் உரசிடு
உன்னுள்ளே கலந்து கரைந்தாலும் பரவாயில்லை
நொடிக்கூட விலகாமல் இருந்தால் போதும்