ஜீவநதியாய் உன்னில்

ஒளி வீசும்
ஓவியமே...-என்
இதழ் பேசும்
காவியமே..
உன் வாசம்
நான் கண்டேன்...-என்
வசம் உன்னையாக்கிக்
கொண்டேன்...
விடியல் தேடும்
இருள் உலகில்...
உன் விழியால்
ஒளி கண்டேன்...
குளிர்க்காயும்
வெண்ணிலவில்
இனிய
உன் குரல் கேட்டேன்
உறைந்துப் போனேன்...
இளமை இன்பம்
கொண்டேன்...
இறைமை இமைமூடி
கண்டேன்...
இதயம் இரவல்
தந்தேன்...
இருளை இறவாமல்
கொன்றேன்..
உயிரே உறவே
என்றாய்..
உணர்வை உணவாய்த்
தந்தாய்...
உரமாய் உயிரில்
கலந்தாய்...
உன்னில் என்னை
கலந்து
ஜீவநதியாகிப்போனேன்
என் காதலா!!!!!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (1-Apr-18, 12:12 am)
பார்வை : 240

மேலே